Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி,மார்ச்.25: கலைஞர் அறிவாலயத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே என் நேரு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய துறை வைகோ, 30 வருடத்திற்கு மேலாக கட்சிக்கு உழைக்கிறேன், நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. எங்கள் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாத போது அரசியலுக்கு வரவழைக்கப்பட்டேன்.உடன் இருப்பவர்களுக்கு சீட்டு கொடுங்கள் என கூறினேன்.
நான் உடனிருந்து வேலை செய்கிறேன் என அறிவுறுத்தினேன்.என்னுடைய அப்பா உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது கட்சியினர் என்னை அரசியலுக்கு கொண்டு வந்தனர் எனது அப்பாவிற்கும் கட்சிக்காகவும் மட்டுமே அரசியலுக்கு வந்தேன் எனது அப்பா ஒரு சகாப்தம்.
எனக் கூறிய உடன் மேடையிலேயே தேம்பி தேம்பி அழுக துவங்கினார் துறை வைக்கோ.அண்ணாவும் திமுக, கலைஞரும் திமுக, எங்க அப்பா வைக்கோவும் திமுக, திமுக வை மதிக்கிறேன் ஆனால் செத்தாலும் எங்கள் சின்னம்தான், எங்களை புண்படுத்தாதீர்கள். நாங்கள் சின்ன கட்சி தான்.என அவர் தெரிவித்தார்.